📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 13, 2026 08:34 PM

பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!

பெரம்பூரில் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!

சென்னை: முதல்​வர் விஜய் தனது பெரம்​பூர் எம்​எல்ஏ அலுவல​கத்தை இன்று திறந்து வைத்​து, பொது​மக்​களுக்கு புதிய குடும்ப அட்டை மற்​றும் பட்​டாக்​களை வழங்​கினார். மேலும், தொகுதி சார்ந்த புகார்​களை தெரிவிக்க பிரத்​யேக செயலி ஒன்​றையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

தேர்தல் வெற்றிக்குப் பின் 2 மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக அதிகாரபூர்வமாக பெரம்பூர் தொகுதிக்கு முதல்வர் விஜய் வருகை புரிந்தார். சர்மாநகரில் புதுப்பிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், அங்குள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், அங்கு அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை திறந்து வைத்தார். பின்னர், ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதோடு, பெரம்பூர் தொகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், சாலைவலமாக நடந்து சென்று மக்களை சந்தித்தார்.

இந்தச் செயலி​யின் மூலம், பொது​மக்​கள் தங்​களின் அடிப்​படைத் தேவை​களான குடிநீர், சாலை, மின்​சா​ரம் போன்ற குறை​களை நேரடி​யாகப் பதிவு செய்யலாம். மேலும், அரசின் நலத்​திட்​டங்​கள் மற்​றும் அதன் தகு​தி​கள் குறித்த விவரங்​களை மக்​கள் எளி​தில் அறிந்​துக் கொள்​ள​வும், தங்​களின் புகார்​களின் தற்​போதைய நிலையை போன் மூல​மாகவே கண்​காணித்​துக் கொள்​ள​வும் இந்​தச் செயலி வழி​வகை செய்​கிறது.

முதல்வர் விஜய்யின் வரு​கையை முன்​னிட்​டு, பெரம்​பூர் தொகுதி முழு​வதும் விழாக்​கோலம் பூண்​டது. பொது​மக்​கள் வசதிக்​காக பிரம்மாண்ட பந்​தல் அமைக்கப்பட்டன. விழா நடைபெறும் பகுதி மற்​றும் அதனைச் சுற்​றி​யுள்ள முக்​கிய சாலைகளில் பலத்த போலீஸ் பாது​காப்​பும், போக்​கு​வரத்து மாற்றங்களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

தனது சொந்த தொகுதி மக்​கள் மீது கொண்​டுள்ள அக்​கறையை வெளிப்​படுத்​தும் வித​மாக அமைய​வுள்ள இந்த விழா, பெரம்​பூர் தொகுதி வரலாற்​றில் ஒரு முக்​கிய நிகழ்​வாகப் பார்க்​கப்​படுகிறது