📅 Monday, 13 July 2026 IST | ஆனி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 12, 2026 07:32 PM

தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைவு

தமிழகத்தில் பிறப்பு விகிதம் குறைவு

சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்த பேரணியை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர். மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, டி.எம்.எஸ் வளாகத்தில் நடந்த உலக மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சிறப்பாக பணிபுரிந்த சுகாதார பணியாளர்கள் மற்றும், நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது:-

உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இன்று திகழும் இந்தியா, தன்னுடைய திருப்புமுனையில் நிற்கிறது. நமது தேசியக் கருவுறுதிறன் விகிதம் அதாவது ஒரு பெண்ணுக்கு பிறக்கும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை 1.9 சதவீதமாக ஆகக்குறைந்து. ஈடு செய் நிலைக்கும் கீழே சென்றுவிட்டது.

பிறப்பு விகிதம்

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.