📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 18, 2026 11:33 AM

இனி சில காலத்திற்கு இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை தொந்தரவு செய்யாது.. ஆகாஷ் சோப் கருத்து

இனி சில காலத்திற்கு இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை தொந்தரவு செய்யாது.. ஆகாஷ் சோப் கருத்து

இனி சில காலத்திற்கு இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை தொந்தரவு செய்யாது.. ஆகாஷ் சோப் கருத்து

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இரண்டு அரைசதங்களை சஞ்சு சாம்சன் அடித்துள்ளதால், இனி சில காலத்திற்கு அணி நிர்வாகம், அவருக்கு தொந்தரவு தராது என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டிக்குப் பிறகு அவர் இக்கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியில், அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். மற்றொருபுறம் சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 50 ரன்கள் எடுத்து தனது தொடர்ச்சியான இரண்டாவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.

222 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி, 14.1 ஓவர்களில் 94 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, "தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்கள் அடித்திருப்பது சஞ்சு சாம்சனுக்கு அணியில் நீடிப்பதற்கான நிம்மதியைத் தரும். ஏனெனில் சில போட்டிகளில் சோபிக்கத் தவறினால் அவர் உடனடியாக பெஞ்சில் அமரவைக்கப்படும் நிலை இருந்து வந்துள்ளது. இந்த ஆட்டத்தை அவர் தொடர்ந்து இதே வேகத்தில் கொண்டு செல்வார் என்று நம்புகிறேன்" என்றார்.

"நம்முடைய சஞ்சு 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். சில நேரங்களில் ஒரு பேட்டர் மிக ஆக்ரோஷமாக விளையாடும்போது, மற்றொரு பேட்டரின் ஆட்டம் சற்று மங்கித் தெரியும். ஆனால் சஞ்சுவின் இந்த இரண்டு அரைசதங்கள் அவரது இடத்தைக் காப்பாற்றியுள்ளன" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்தொடரில் சஞ்சு சாம்சன் 3 இன்னிங்ஸ்களில் 180.00 ஸ்டிரைக் ரேட்டுடன் விளாசி 117 ரன்கள் எடுத்துள்ளார்.

"அபிஷேக் சர்மா களத்தில் சீறத் தொடங்கினால், வீடியோ கேமில் கூட யாரும் இவ்வளவு வேகமாக பந்துகளை அடிக்க முடியாது. சிக்ஸர்களை பறக்கவிட்டு எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்துவிட்டார். கோட்லா மைதானம் சிறியது என்றாலும், அவரது தொடர்ச்சியான சிக்ஸர்கள் பிரமிக்க வைத்தன" என்றார்.

"அபிஷேக் சர்மா சில போட்டிகளில் ரன் குவிக்கத் தவறினாலும், அணி நிர்வாகம் ஏன் அவர் மீது தொடர்ந்து முதலீடு செய்கிறது என்பதற்கான விடை இதுதான். அவர் விளையாடத் தொடங்கிவிட்டால் போட்டியை வென்று தருவது மட்டுமல்லாமல், எதிரணியை முற்றிலுமாக நிலைகுலையச் செய்துவிடுவார். சவாலான அவரது இன்னிங்ஸை யாராலும் கட்டுப்படுத்த முடியாது" என்று சோப்ரா கூறினார். 26 வயதான அபிஷேக் சர்மா இத்தொடரில் 3 இன்னிங்ஸ்களில் 76.33 சராசரியுடன் 229 ரன்கள் குவித்து தொடர் நாயகன்விருதையும் வென்றார்.