வார விடுமுறை; தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 655 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் குணசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர் கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அன்று 760 பஸ் களும், நாளை (சனிக்கிழமை) 520 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள் ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங் கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 115 பஸ்களும், நாளை 115 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரு. திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல் வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோ ணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு 18 மற்றும் 19-ந் தேதிகளில் தலா 70 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இயக்க திட்டமிடட் பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக் கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 805 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.