Tamil Nadu
July 13, 2026 07:34 AM
சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் வெளியிட்ட அறிக்கை: கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்
சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உசேன் வெளியிட்ட அறிக்கை: கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விடுதி குளியலறையில், இரண்டாம் ஆண்டு படித்து வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி தர்ணிகா சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது.
மாணவியின் உடலில் காயம் இருப்பதாகப் பெற்றோர்கள் குற்றம் சாட்டுவதோடு, அவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படும் தகவலையும் முற்றிலும் மறுத்துள்ளனர். இந்த மரணம் இயற்கையா, தற்கொலையா, விபத்தா அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரி விடுதிகளிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu