Politics
September 08, 2026 02:03 AM
By
By-Election: மதராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்!
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து சில எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்தனர். இதனால் சில தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க வேண்டியிருந்தது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்.6 ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு காரணமாக மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் புதுவை தட்டாஞ்சாவடிக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
Politics