📅 Sunday, 06 September 2026 IST | ஆவணி 21, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 06, 2026 02:04 AM

நீண்ட நாள் கனவு நனவாகப்போகிறது

நீண்ட நாள் கனவு நனவாகப்போகிறது

முன்னாள் முதல்-அமைச்சர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவை நிறைவேற்றப்போகும் நல்ல அறிவிப்பை முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டிருக்கிறார்.

புனித ஜார்ஜ் கோட்டை

பின்னர் இது ஆங்கிலேயர்களின் முக்கிய நிர்வாக மையமாகத் திகழ்ந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசின் தலைமைச்செயலகமாக செயல்பட்டு வருகிறது. 107 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில் முதல்-அமைச்சர் அலுவலகம், சட்டசபை, அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

பெருந்தலைவர் காமராஜர்

அதன்பிறகு கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என்று திராவிட கட்சிகளின் அதாவது தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சியே இருந்து வந்தது. திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு பதிலாக, முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் கடந்த தேர்தலில் வாகை சூடி ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது.

புதிய கட்டிடம்

ஓமந்தூரார் அரசினர் தோட்டம்

இந்தநிலையில், முதல்-அமைச்சர் விஜய் இப்போதுள்ள இட நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அடுத்த நூறாண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச்செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகத்தை சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடியில் உருவாக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்திருக்கிறார்.