Videos news
September 07, 2026 08:00 PM
காணொளி: மனிதர்களை தாக்கிய புலியை தேடும் கும்கி யானைகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே மனிதர்களை தாக்கிய புலியை தேடும் பணியில் இரண்டு கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கூடலூர் அருகே ஓவேலி பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புலி தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். புலியை கூண்டுவைத்து பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது புலியை தேடும் பணியில் இரண்டு கும்கி யானைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.