வெளிநாட்டுக்கு ஓடுவதைப் போல ஒரு ஓட்டம்.. இது அரசியல் வரலாற்றுக் கல்வெட்டு..
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வைத்த ஒவ்வொரு குற்றச்சாட்டும் அந்தளவுக்கு அனலாக இருந்தது. முதலமைச்சர் விஜய்யை உட்கார விடாமல் அவஸ்தைக்கு உள்ளாக்கியது. பதில் சொல்லவும் முடியவில்லை. உட்கார்ந்து கேட்கவும் முடியவில்லை.
‘உலகப் புகழ் பெற்ற பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறேன்’ என்ற மிதப்பில் முதலமைச்சர் விஜய் உட்கார்ந்து இருக்க, ‘இது மாற்றமல்ல, நாற்றம்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அம்பலப்படுத்தினார். இதைக் கேட்டுத் தான் ஓடினார் முதலமைச்சர் விஜய். உண்மையில் இவை அனைத்தும் அவருக்கே தெரியாத தகவல்களாகத்தான் இருக்கும். ‘சூப்பர்ண்ணா’ என்று சுற்றி இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்த விஜய்க்கு, நாட்டின் நிலைமையை உணர வைத்துவிட்டது உதயநிதியின் உரை. ‘படம் சூப்பர் பிளாப்’ ஆனால் நடிகர்கள் வெளிநாட்டுக்கு ஓடுவதைப் போல ஓடினார் முதலமைச்சர் விஜய்.
சட்டசபையில், மாநிலத்தின் முதலமைச்சர் உட்கார முடியாமல் ஓடியது இதுதான் முதல் முறையாக இருக்கும். 100 நாளில் விஜய்யின் பிம்பம் கிழிந்து தொங்குகிறது. அவரே அதைக் கிழித்துக் கொண்டிருக்கிறார் என்பதைத்தான் அவர் ஓடியதன் மூலமாக உணர முடிகிறது.
சமூக வலைத்தளத்தில் ஒருவர் எழுதி இருப்பது கமெண்ட் அல்ல, அரசியல் வரலாற்றுக் கல்வெட்டு...
‘’ஆளுநர் ரவியை ஓட விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
முதலமைச்சர் விஜய்யை ஓட விட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...
இந்தியக் குடியரசு வரலாற்றில் இது புதுசு...” – என்று எழுதி இருக்கிறார்.
ஓட விடுவது கம்பீரம்.