📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 04, 2026 07:05 PM

வைபவ் சூர்யவன்ஷியுடன் இந்த ஸ்டார் வீரரை களம் இறக்குங்கள்! புதிய ஜோடி தான் கரெக்ட்

வைபவ் சூர்யவன்ஷியுடன் இந்த ஸ்டார் வீரரை களம் இறக்குங்கள்! புதிய ஜோடி தான் கரெக்ட்

வைபவ் சூர்யவன்ஷியுடன் இந்த ஸ்டார் வீரரை களம் இறக்குங்கள்! புதிய ஜோடி தான் கரெக்ட்- EX வீரர் கருத்து

மும்பை: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரவிருக்கும் டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இது இந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுக்கு அணியின் டாப் ஆர்டரில் தனது இடத்தை மீண்டும் உறுதி செய்வதற்கான மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

முன்னதாக,பிளேயிங் லெவனில் கிடைத்த வாய்ப்புகளில் சோபிக்கத் தவறியதைத் தொடர்ந்து, ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் இருந்து சாம்சன் நீக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெற்றிருந்த போதிலும், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.

டி20 உலககோப்பை வெற்றிக்குப் பிறகு, இந்திய அணி நிர்வாகம் குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து பல சோதனைகளைச் செய்து வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் சேர்க்கப்பட்டு, அபிஷேக் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பைப் பெற்றார்.

சஞ்சு சாம்சன் தற்போது அணிக்குத் திரும்பியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் தொடர் மற்றொரு புதிய தொடக்க கூட்டணியைச் சோதிப்பதற்கான வாய்ப்பாக அமையும் என்று முன்னாள் இந்திய விக்கெட் கீப்பர் தீப் தாஸ்குப்தா நம்புகிறார். சாம்சன் மற்றும் சூர்யவன்ஷி ஜோடி இதுவரை இந்தியாவுக்காக இணைந்து இன்னிங்ஸைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசிய அவர், "கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளைப் பற்றி யோசித்தால், சஞ்சு மற்றும் அபிஷேக் ஜோடி களமிறங்கியது. ஜிம்பாப்வே தொடரைத் தவிர்த்து விடுங்கள். அனைத்து வீரர்களும் அணியில் இருந்தபோது சஞ்சு மற்றும் அபிஷேக் ஜோடி தான் விளையாடியது. சஞ்சு-வைபவ் பார்ட்னர்ஷிப்பை நாம் இன்னும் பார்க்கவில்லை.

இதுவரை நாம் அபிஷேக்-வைபவ் மற்றும் அபிஷேக்-சஞ்சு ஜோடிகளை மட்டுமே பார்த்திருக்கிறோம். சஞ்சு மற்றும் வைபவ் இணைந்து எந்த வகையான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை சோதித்துப் பார்ப்பது மோசமான யோசனையல்ல" என்று தாஸ்குப்தா தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, 3 இன்னிங்ஸ்களில் 50.33 சராசரியிலும், 196.10 ஸ்டிரைக் ரேட்டிலும் 151 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதில் இரண்டு அரைசதங்கள் அடங்கும். இதன் மூலம் அவர் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.