திமுக செய்த தவறுகளை சொல்லியே ஆக வேண்டும்; அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம்
சென்னை: திமுக செய்த தவறுகள், துரோகங்களை சொல்லி தான் ஆக வேண்டும். தவறுகளை சரி செய்ய நாங்கள் எவ்வளவு போராடி கொண்டு இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் மட்டும் தான் கட்சியுடன் கூட்டணி இருக்கும்; எங்களுடைய ஆட்சி ஆதரவு இருக்கும் என கம்யூனிஸ்ட் கூறியுள்ளது. நாங்கள் மக்களுக்கான அரசாக செயல்பட்டு வருகிறோம். திமுக செய்த தவறுகள், துரோகங்களை சொல்லி தான் ஆக வேண்டும். 5 வருடமாக திமுக செய்த தவறுகளை சரி செய்ய நாங்கள் எவ்வளவு போராடி கொண்டு இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும்.
தமிழகத்தின் நிதி நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது. ஒவ்வொரு துறையும் எவ்வளவு மோசமாக இருக்கிறது; 3 தலைமுறை 70 வருட கட்சி, அரசியல் இருக்கிறோம் எல்லாம் சரி தான். ஆனால் மக்களுக்கு என்ன செய்தீர்கள். நீங்கள் எதை சொல்லி மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். இன்றைக்கு இருக்கும் தலைமுறைக்கு சொல்லி தான் ஆக வேண்டும். திமுக கச்சத்தீவை தாரை வார்த்தார்கள்.
தற்போது துப்பாக்கிச்சூடு நடக்கிறது. மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால், நீங்கள் செய்த தவறு தானே, இதை சொல்லி தானே ஆக வேண்டும். 50 வருடமாக மீனவர்கள் கஷ்டங்களுக்கு யார் பொறுப்பு; அரசியல் மற்றும் மக்களை பற்றி தெரியாத ரத்தீஷ் மாதிரியான பவர் புரோக்கரை வைத்து அரசை நடத்தியுள்ளனர்; குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி கூட 24 மணி நேரமும் இருந்தவர் தான் ரத்தீஷ்; அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி உடன் நெருக்கமாக இருந்த ரத்தீஷ் தலைமறைவாக இருப்பது ஏன்? இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்