📅 Wednesday, 16 September 2026 IST | ஆவணி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 16, 2026 04:33 PM

டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மாற்றம்

டெண்டர் முறைகேடு புகார்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மாற்றம்

சென்னை: தாம்​பரம் மாநக​ராட்​சி​யில் பெருங்​களத்​தூர் பாலம் ரவுண்​டா​னா​வில் அசோகத் தூண் அமைத்​தல் மற்​றும் அழகுபடுத்​தும் பணிக்கு ரூ.27.30 லட்​சம், சிட்​ல​பாக்​கம் ரவுண்​டா​னா​வில் தண்​ணீர் சேமிப்பு விழிப்​புணர்வு சிலை அமைத்​தல் மற்​றும் அழகுபடுத்​தும் பணிக்கு ரூ.18.60 லட்​சம் மதிப்​பில் டெண்​டர் கோரப்​பட்​டுள்​ளது.

இந்த டெண்​டர்​கள் இறுதி செய்​யப்​படு​வதற்கு முன்பே பணி​கள் முடிக்​கப்​பட்டு திறப்பு விழா நடத்​தப்​பட்​ட​தாக குற்​றம் சாட்டி முதல்​வர், தலை​மைச் செயலர், நகராட்சி நிர்​வாகத் துறை அதி​காரி​கள் மற்​றும் லஞ்ச ஒழிப்​புத் துறை​யிடம் அறப்​போர் இயக்​கம் புகார் அளித்​திருந்​தது.

மேலும் இரு டெண்டர்களும் இணை​யதளத்​தில் ‘திறக்​கப்பட வேண்​டியது’ என்ற நிலை​யில் இருப்​ப​தாக​வும் புகாரில் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக பல்​வேறு அரசி​யல் கட்​சிகளின் தலை​வர்​களும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்த டெண்​டர் விவ​காரம் சர்ச்​சை​யான நிலை​யில், மாநக​ராட்சி ஆணை​யர் பாலச்​சந்​தர், காத்​திருப்​போர் பட்​டியலுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார். அவருக்​குப் பதிலாக ஆவடி மாநக​ராட்சி ஆணை​யர் சரண்​யா​வுக்கு தாம்​பரம் மாநக​ராட்சி ஆணை​யர் பொறுப்​பு கூடு​தலாக வழங்​கப்​பட்​டுள்​ளது.