📅 Wednesday, 08 July 2026 IST | ஆனி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News July 08, 2026 02:00 AM

IND vs ENG: இந்திய டி20 வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. பெரும் அவமானத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் அணி

IND vs ENG: இந்திய டி20 வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. பெரும் அவமானத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் அணி

IND vs ENG: இந்திய டி20 வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.. பெரும் அவமானத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் அணி

நாட்டிங்ஹாம்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாகத் தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றியைப் பெற முடியாமல் இந்தியா தனது மிக மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது.

நாட்டிங்ஹாமில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, பிலிப் சால்ட்டின் (70 ரன்கள்) அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் அறிமுக வீரர் பிரின்ஸ் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து 202 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெறும் 11.4 ஓவர்களில் 76 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபமாகச் சுருண்டது. இந்திய அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட 20 ரன்களை தாண்டவில்லை. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இஷான் கிஷன் தலா 13 ரன்களும், அபிஷேக் சர்மா மற்றும் அக்சர் படேல் தலா 10 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங் 4 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷித் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். இந்த 125 ரன்கள் படுதோல்வியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் 2 போட்டிகளே மீதமுள்ள நிலையில் இந்திய அணியால் இந்த தொடரை வெல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக அயர்லாந்து தொடரில் 2 போட்டிகளில் தோற்ற இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், அடுத்த 2 போட்டிகளிலும் படுதோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 வரலாற்றில் தொடர்ந்து 5 போட்டிகளில் ஒரு வெற்றியைக்கூடப் பெறாமல் இந்தியா தனது மிக மோசமான சாதனையை எட்டியுள்ளது. கம்பீரின் தற்போதைய பயிற்சி முறைகள் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சிக்கு எதிராக விமர்சனங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.